¾Á¢§Æ ±ý¨É ¿£
¬ð¦¸¡ñ¼¡ö!.............
¾Á¢§Æ ±ý¨É ¿£
¬ð¦¸¡ñ¼¡ö!.............
¾Á¢§Æ ±ý¨É ¿£
¬ð¦¸¡ñ¼¡ö!.............¾Á¢ú
¾Á¢ú
±ýÈ ¯îº¡¢ô¨À
ÀñÀÎòЧšõ!
¾Á¢ú
þÉõ ÀñÀ¡ð§¼¡Î Å¡Øõ!..........
THIRUKKURAL | திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்( TNPSC ) நடத்தப்படும்
தேர்வுகளிலபொதுத் தமிழ் பகுதியில் பகுதி ஆ.1.திருக்குறள் தொடர்பான
செய்திகள்மேற்கோள்கள் தொடரைநிரப்புதல் பகுதியில் அன்பு, பண்பு,
கேள்விஅறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி
ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக் கோடல்,பொருள்
செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல். போன்ற 19 அதிகாரம் மட்டும் இடம்
பெற்றுள்ளன.
திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்களை பார்ப்போம். "இறைவன் மனிதனுக்குச்
சொன்னது கீதை மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம் மனிதன்
மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்" மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய
அறம் அல்லது தர்மம், பொருள் இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி
விளக்கும் தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
இவரது காலம் கி.மு.31 என்று கூறுவர். இதை தொடக்கமாகக் கொண்டே
திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. இவரது ஊர், பெற்றோர் குறித்த
முழுமையான செய்திகள் கிடைக்கப்பெறவில்லை. .
திருவள்ளுவர் செஞ்ஞாப்போதார், தெய்வப்புலவர், நாயனார், முதற்பாவலர்,
நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர், பொய்யில்புலவர் என பல சிறப்புப்
பெயர்களால் போற்றப்படுகிறார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை:
கிறிஸ்து ஆண்டு (கிபி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு. எ.கா: 2014 +31 = 2045
(கி.பி.2014-ஐ திருவள்ளுவர் ஆண்டு 2045 என்று கூறுவோம்)
* திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.
* திருக்குறள் இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.
* திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
* திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
* திருக்குறளில் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக 133 அதிகாரங்களையும், 1330 குறள்களையும் கொண்டது.
* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
* திருக்குறள் தமிழ்ச் செய்யுள்களில் முதல் பாவாகிய வெண்பாவில் முதல் வகையாகிய குறட்பாக்களால் ஆனது.
* திருக்குறள் முப்பால்களை கொண்டது. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவை ஆகும்.
* அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.
* திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள்: குறிப்பறிதல் - (பொருட்பால் - அதிகாரம் 71) குறிப்பறிதல் - (காமத்துப்பால் - அதிகாரம் 110)
* திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.
* திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
* திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
* திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
* திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
* திருக்குறளில் 46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
* திருக்குறள் மாந்தர்கள் தம் அகவாழ்வில் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்வில் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
* திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில்இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்.
* திருக்குள் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.
* திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் - அனிச்சம், குவளை
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி
* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
* திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளன.
* திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
* திருக்குறளில் ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது
உயிரெழுத்துக்கள்→ மெய்யெழுத்துக்கள் ↓ |
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
க் | க | கா | கி | கீ | கு | கூ | கெ | கே | கை | கொ | கோ | கௌ |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ |
ச் | ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ |
ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ |
ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ |
ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ |
த் | த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை | தொ | தோ | தௌ |
ந் | ந | நா | நி | நீ | நு | நூ | நெ | நே | நை | நொ | நோ | நௌ |
ப் | ப | பா | பி | பீ | பு | பூ | பெ | பே | பை | பொ | போ | பௌ |
ம் | ம | மா | மி | மீ | மு | மூ | மெ | மே | மை | மொ | மோ | மௌ |
ய் | ய | யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ |
ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ |
ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ |
வ் | வ | வா | வி | வீ | வு | வூ | வெ | வே | வை | வொ | வோ | வௌ |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ |
ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ |
ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ |
ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
கிரந்த எழுத்துக்கள்
முதன்மைக் கட்டுரை: கிரந்த எழுத்துமுறை
கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். இருபதாம் நூற்றாண்டில் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம்
சமற்கிருதம் மீது பொதுவாகச் செய்த தாக்கத்தாலும் கிரந்த எழுத்துக்களின்
பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழில் மணிப்பிரவாள எழுத்து நடை
செல்வாக்கு செலுத்தியபொழுது கிரந்த எழுத்துக்கள் பரவலாகப்
பயன்படுத்தப்பட்டது. இன்று, மணிப்பிரவாள எழுத்து நடை
மறைந்தாலும், 'ஜ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ' போன்ற கிரந்த எழுத்துக்கள்
ஆங்கிலச் சொற்களையும் அறிவியல் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச்
சொற்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.ஜ் | ஜ | ஜா | ஜி | ஜீ | ஜு | ஜூ | ஜெ | ஜே | ஜை | ஜொ | ஜோ | ஜௌ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஷ் | ஷ | ஷா | ஷி | ஷீ | ஷு | ஷூ | ஷெ | ஷே | ஷை | ஷொ | ஷோ | ஷௌ |
ஸ் | ஸ | ஸா | ஸி | ஸீ | ஸு | ஸூ | ஸெ | ஸே | ஸை | ஸொ | ஸோ | ஸௌ |
ஹ் | ஹ | ஹா | ஹி | ஹீ | ஹு | ஹூ | ஹெ | ஹே | ஹை | ஹொ | ஹோ | ஹௌ |
க்ஷ் | க்ஷ | க்ஷா | க்ஷி | க்ஷீ | க்ஷு | க்ஷூ | க்ஷெ | க்ஷே | க்ஷை | க்ஷொ | க்ஷோ | க்ஷெள |
ஸ்ரீ |
தமிழ் ஒலிப்புமுறை
முதன்மைக் கட்டுரை: தமிழ் ஒலிப்புமுறைதமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும் உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தும் 18 மெய்யெழுத்துகளோடும் சேர்வதால் 216 உயிர்மெய்யெழுத்துகள் பிறக்கின்றன. இவற்றோடு ஆய்த எழுத்தும் சேர்த்து தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 (உயிரெழுத்துகள் - 12, மெய்யெழுத்துகள் - 18, உயிர்மெய்யெழுத்துகள் - 216, ஆய்த எழுத்து - 1) ஆகும்.
நா சுழற்றி வாக்கியம்: "ஏழை கிழவன் வாழைப்பழத்தோல்மேல் சருசருக்கி வழுவழுக்கி கீழே விழுந்தான்."
|
|
இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். |
![]()
நா சுழற்றி வாக்கியம்: "கொக்கு நெட்ட கொக்கு. நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட"
|
|
இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். |
உயிர் எழுத்துக்கள்
உயிரெழுத்துக்களில் குறுகிய ஓசையுடைய எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துக்கள்(குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துக்களான ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ ஆகிய எழுத்துக்கள் நெட்டெழுத்துக்கள்(நெடில்) எனவும் வழங்கப்படும்.குறிலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் ஒரு மாத்திரை நேரத்திலும், நெட்டெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் இரண்டு மாத்திரை நேரத்திலும் ஒலிக்க வேண்டும்.
குறில் | நெடில் | |||||
---|---|---|---|---|---|---|
முன் | நடு | பின் | முன் | நடு | பின் | |
மேல் | i | u | iː | uː | ||
இ | உ | ஈ | ஊ | |||
இடை | e | o | eː | oː | ||
எ | ஒ | ஏ | ஓ | |||
கீழ் | a | (ai) | aː | (aw) | ||
அ | ஐ | ஆ | ஒள |
மெய் எழுத்துக்கள்
மெய்யெழுத்துக்களில் வன்மையான ஓசையுடைய எழுத்துக்கள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துக்கள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துக்கள் இடையினம் என்றும் வழங்கப்படும்.- வல்லினம் : க் ச் ட் த் ப் ற்
- மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்
- இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்
கீழேயுள்ள அட்டவணையில் தமிழ் மெய்யெழுத்துக்கள், அனைத்துலக ஒலிப்பெழுத்துக்களுடனும், ஒலிப்பு வகைகளுடனும் தரப்பட்டுள்ளன.
இதழ் | பல் | நுனியண்ணம் | வளைநா | இடையண்ணம் | கடையண்ணம் | |
---|---|---|---|---|---|---|
வெடிப்பு | p (b) | t̪ (d̪) | ʈ (ɖ) | tʃ (dʒ) | k (g) | |
ப | த | ட | ச | க | ||
மூக்கு | m | n̪ | ṉ | ɳ | ɲ | ŋ |
ம | ந | ன | ண | ஞ | ங | |
உருட்டு | ɾ̪ | r | ||||
ர | ற | |||||
மருங்கு | l̪ | ɭ | ||||
ல | ள | |||||
உயிர்ப்போலி | ʋ | ɻ | j | |||
வ | ழ | ய |
சிறப்பு எழுத்து - ஆய்த எழுத்து
ஆய்த எழுத்து
- அஃது- 'அ' குறில் 'து'- வல்லினஉயிர்மெய்
- எஃகு- 'எ' குறில் 'கு'- வல்லினஉயிர்மெய்
- அஃது உரிமையுடையது- அடுத்த சொல்லின் முதலெழுத்து 'உ' உயிரெழுத்து
ஒலிப்பியல்
- தொடர்புடைய கட்டுரைகள்: தமிழ் வட்டார மொழி வழக்குகள்
சொல்லின் முதலில் சகரம் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டும் என்ற நெறியைத் தவிர பிற நெறிமுறைகள் செந்தமிழில் பொதுவாகப் பின்பற்றப்படுகின்றன. கொடுந்தமிழ் அல்லது வழக்குத்தமிழில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஏற்ப ஒலிப்புமுறை வேறுபடுகிறது. தென்வட்டார வழக்குகளிலும் இலங்கை வழக்குகளிலும் இம்முறை பெரும்பாலும், ஆனால் முழுமையாகவல்லாமல், பின்பற்றப்படுகிறது. வடபகுதி வட்டார வழக்குகளில் ஒலிப்பெயர்வு ஏற்பட்டு ஒலிப்புநெறிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவைதவிர, சமஸ்கிருதம் மற்றும் பிற வடமொழிகளிலிருந்து பெறப்பட்ட சொற்கள் தமிழில் பெரிதும் உள்ளபடியே பயன்படுத்தப்படுகின்றன.
தமிழ் எழுத்தில் ஏன் மிடற்றொலி மற்றும் பிறவொலி வேறுபாடுகள் இல்லையென்ற கேள்விக்கு ஒலிப்பியலாளர்கள் நடுவே ஒருமித்த கருத்து இல்லை. ஒரு சாரார் தமிழ் மொழியில் கூட்டுமெய்களும் மிடற்றினின்றொலிக்கும் வல்லெழுத்துக்களோ அடிப்படையில் இருந்ததில்லையென்றும் சொற்புணர்ச்சி மற்றும் குறுக்கத்தினால் மட்டுமே இவ்வொலிகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிடுகின்றனர். அதனால், இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் மற்றும் பிற திராவிட மொழிகளைப் போலன்றி தமிழில் இவ்வொலிகளுக்கெனத் தனியெழுத்துக்கள் தேவைப்படவில்லை என்று கருதுகின்றனர். இக்கருத்திலிருந்து மாறுபட்டு மிடற்றொலிகள் அவற்றையொத்த பிற ஒலிகளின் வகையொலிகளாகவே தமிழில் இருந்துள்ளன என்றும் அதனாலேயே அவற்றிற்கெனத் தனியாக எழுத்துக்குறிகள் இல்லையெனவும் ஒரு கருத்தைச் சிலர் முன்வைக்கின்றனர்.
குறுக்கம்
குறுக்கம் என்பது சில ஒலிப்பியல் கூறுகள் சில குறிப்பிட்ட ஒலிகளையடுத்து வரும்பொழுது தத்தம் இயல்பான ஒலி அளவுகளிலிருந்து குறைந்து ஒலித்தலைக் குறிக்கும். அவை பின்வருவன.- குற்றியலுகரம் - உயிர் உ
- குற்றியலிகரம் - உயிர் இ
- ஐகாரக் குறுக்கம் - கூட்டுயிர் (diphthong) ஐ
- ஔகாரக் குறுக்கம் - கூட்டுயிர் ஔ
- ஆய்தக் குறுக்கம் - சிறப்பெழுத்துஃ (ஆய்தம்)
- மகரக் குறுக்கம் - மெய் ம்
எண்கள்
எண் குறிகள்
தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 100 | 1000 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
௦ | ௧ | ௨ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ௰ | ௱ | ௲ |
எண் ஒலிப்பு
- ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
எண் | அளவு | சொல் |
---|---|---|
1/320 | 320 இல் ஒரு பங்கு | முந்திரி |
1/160 | 160 இல் ஒரு பங்கு | அரைக்காணி |
3/320 | 320 இல் மூன்று பங்கு | அரைக்காணி முந்திரி |
1/80 | 80 இல் ஒரு பங்கு | காணி |
1/64 | 64 இல் ஒரு பங்கு | கால் வீசம் |
1/40 | 40 இல் ஒரு பங்கு | அரைமா |
1/32 | 32 இல் ஒரு பங்கு | அரை வீசம் |
3/80 | 80 இல் மூன்று பங்கு | முக்காணி |
3/64 | 64 இல் மூன்று பங்கு | முக்கால் வீசம் |
1/20 | 20 ஒரு பங்கு | ஒருமா |
1/16 | 16 இல் ஒரு பங்கு | மாகாணி (வீசம்) |
1/10 | 10 இல் ஒரு பங்கு | இருமா |
1/8 | 8 இல் ஒரு பங்கு | அரைக்கால் |
3/20 | 20 இல் மூன்று பங்கு | மூன்றுமா |
3/16 | 16 இல் மூன்று பங்கு | மூன்று வீசம் |
1/5 | ஐந்தில் ஒரு பங்கு | நாலுமா |
1/4 | நான்கில் ஒரு பங்கு | கால் |
1/2 | இரண்டில் ஒரு பங்கு | அரை |
3/4 | நான்கில் மூன்று பங்கு | முக்கால் |
1 | ஒன்று | ஒன்று |
- எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை இருக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
எண் | ஒலிப்புச் சொல் |
---|---|
1 | ஒன்று (ஏகம்) |
10 | பத்து |
100 | நூறு |
1000 | ஆயிரம்(சகசிரம்) |
10,000 | பத்தாயிரம்(ஆயுதம்) |
1,00,000 | நூறாயிரம்(இலட்சம் - நியுதம்) |
10,00,000 | பத்து நூறாயிரம் |
1,00,00,000 | கோடி |
10,00,00,000 | அற்புதம் |
1,00,00,00,000 | நிகற்புதம் |
10,00,00,00,000 | கும்பம் |
1,00,00,00,00,000 | கணம் |
10,00,00,00,00,000 | கற்பம் |
1,00,00,00,00,00,000 | நிகற்பம் |
10,00,00,00,00,00,000 | பதுமம் |
1,00,00,00,00,00,00,000 | சங்கம் |
10,00,00,00,00,00,00,000 | வெள்ளம்(சமுத்திரம்) |
1,00,00,00,00,00,00,00,000 | அந்நியம் |
10,00,00,00,00,00,00,00,000 | (அர்த்தம்) |
1,00,00,00,00,00,00,00,00,000 | பரார்த்தம் |
10,00,00,00,00,00,00,00,00,000 | பூரியம் |
1,00,00,00,00,00,00,00,00,00,000 | பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி) |
மேலும் சில எண் குறிகள்
௧ = 1௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௱௫௰௬ = 156
௨௱ = 200
௩௱ = 300
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (lakh)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 lakhs)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (crore)
௰௱௱௲ = 100,000,000 (10 crore)
௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
மேலும் சில இறங்குமுக எண்கள்
1 – ஒன்று3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்
அளவைகள்
நீட்டலளவு
10 கோன் – 1 நுண்ணணு10 நுண்ணணு – 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு – 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் – 1 துசும்பு
8 துசும்பு – 1 மயிர்நுணி
8 மயிர்நுணி – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 சிறுகடுகு
8 சிறுகடுகு – 1 எள்
8 எள் – 1 நெல்
8 நெல் – 1 விரல்
12 விரல் – 1 சாண்
2 சாண் – 1 முழம்
4 முழம் – 1 பாகம்
6000 பாகம் – 1 காதம்(1200 கெசம்)
4 காதம் – 1 யோசனை
பொன்நிறுத்தல்
4 நெல் எடை – 1 குன்றிமணி2 குன்றிமணி – 1 மஞ்சாடி
2 மஞ்சாடி – 1 பணவெடை
5 பணவெடை – 1 கழஞ்சு
8 பணவெடை – 1 வராகனெடை
4 கழஞ்சு – 1 கஃசு
4 கஃசு – 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்
32 குன்றிமணி – 1 வராகனெடை10 வராகனெடை – 1 பலம்
40 பலம் – 1 வீசை
6 வீசை – 1 தூலாம்
8 வீசை – 1 மணங்கு
20 மணங்கு – 1 பாரம்
முகத்தல் அளவு
5 செவிடு – 1 ஆழாக்கு2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
பெய்தல் அளவு
300 நெல் – 1 செவிடு5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
5 மரக்கால் – 1 பறை
80 பறை – 1 கரிசை
48 96 படி – 1 கலம்
120 படி – 1 பொதி.
இலக்கணம்
முதன்மைக் கட்டுரை: தமிழ் இலக்கணம்இலக்கண அடிப்படையில் தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழியாகும். தமிழில், பெயர் வகை, எண், வேற்றுமை, காலம், போன்றவற்றை விளக்கச் சொற்களுடன் பின்னொட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன. தமிழின் பொதுவான கருவி மொழியியல் (metalinguistic) சொற்களும் கலைச் சொற்களும் தமிழாகவே உள்ளன.
தமிழ் இலக்கணம் பெருவாரியாகத் தொல்காப்பியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. தற்கால தமிழ் இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைத் தழுவியமைந்துள்ளது. பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நன்னூலில் தொல்காப்பிய நெறிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
தமிழ்ச் சொற்கள் வேர்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுக்கு ஒன்று அல்லது பல ஒட்டுக்களைச் சேர்ப்பதன் மூலம் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இம்மொழியில் பெரும்பாலான ஒட்டுக்கள் பின்னொட்டுக்களாகும். பின்னொட்டுக்கள் சொற்களின் இலக்கண வகையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன அல்லது அவற்றில் பொருளை மாற்றுகின்றன. இவை சொற்களுக்கு இடம், எண், பால், காலம் போன்றவற்றை உணர்த்தும் பொருள்களையும் கொடுக்கின்றன. இவ்வாறு சொற்களுக்கு ஒட்டுக்களைச் சேர்ப்பதில் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடும் கிடையாது. இதனால் தமிழில் பல ஒட்டுக்களைக் கொண்ட நீளமான சொற்கள் இருப்பதைக் காணலாம்.
தமிழில் பெயர்ச் சொற்கள் இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை உயர்திணை, அஃறிணை என்பவை. உயர்திணை கடவுளர், மனிதர் என்பவர்களைக் குறிக்கும் சொற்களை உள்ளடக்குகின்றன. ஏனைய உயிரினங்களையும், பொருட்களையும் குறிக்கும் சொற்கள் அஃறிணைக்குள் அடங்குகின்றன. உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பாலென மூன்று பால்களாகவும், அஃறிணை ஒன்றன்பால், பலவின் பாலென இரண்டு பால்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன. உயர்திணையுள் அடங்கும் ஆண்பால், பெண்பால் என்பன ஒருமைப் பொருளைச் சுட்டுகின்றன. பலர்பால் பன்மைப் பொருளைச் சுட்டுவது மட்டுமன்றி மதிப்புக் கொடுப்பதற்காக ஒருமையாகவும் பயன்படுவதுண்டு.
தமிழில் வேற்றுமைகள் எட்டுவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை முதலாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமையெனப் பெயரிடப்பட்டு உள்ளன. இப்பகுப்பு சமஸ்கிருத இலக்கண அடிப்படையிலானது என்றும் இதனால் செயற்கையானது என்றும் தற்கால மொழியியலாளர் சிலர் கூறுகின்றனர்.
சொல் வளம்
- பார்க்கவும்: விக்சனரியில் உள்ள தமிழ் சொற்களின் பட்டியல் மற்றும் தமிழ் மொழியிலிருந்து உருவான சொற்களின் பட்டியல்
பிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்திற்கும் அவசியம், ஆகையால் தமிழ் அடிச்சொற்களிலிருந்து உருவாக்கப்படும் சொற்களைப் பயன்படுத்துவதே நன்று என்பது பல தமிழ் ஆர்வலர்களின் கருத்து ஆகும்.
கலைச்சொற்கள்
தமிழ் மொழியில் அறிவியலைப் படைக்கக் கலைச்சொல்லாக்கம் இன்றியமையாததாகும். இது தமிழ் மொழியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடுதான். இக்காலத்தில் தமிழக இலங்கை அரசுகளின் பல்கலைக்கழகங்கள் ஊடாகவும் தமிழ்த் தன்னார்வலர்களாலும் இப்பணி தொடர்கின்றது.தமிழ் மொழி ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்புகள்
தமிழ் மொழி ஆய்வுக்கும் வளர்ச்சிக்கும் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் சில அமைப்புகளை நிறுவிச் செயல்படுத்தி வருகின்றன. அரசு அமைப்புதவிர சில தனி அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.இந்திய அரசு அமைப்பு
தமிழ்நாடு அரசு அமைப்புகள்
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
- அறிவியல் தமிழ் மன்றம்
- தமிழ் வளர்ச்சித் துறை
- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
- உலகத் தமிழ்ச் சங்கம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
தனி அமைப்புகள்
ச்சரிக்கை: இத் தரவுகள் மற்றும் ஆதாரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, பூர்த்தி செய்யப்படவில்லை.
கொடுந்தமிழ் நாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பண்டைக்
காலத்து அறிஞர்கள் பாண்டிய நாட்டின் வடபகுதியில் வழங்கப்பட்ட தமிழைச்
செந்தமிழ் எனக் கொண்டு அந்நிலம் தவிர்த்து ஏனைய பன்னிரு நிலங்களில்
வழங்கப்பட்டுவந்த தமிழைக் கொடுந்தமிழ் (கிளைமொழி) என்று கொண்டனர்.
அப்பன்னிரு நிலங்களும் கொடுந்தமிழ் நாடு என்றழைக்கப்பட்டன.
சுருங்கக்கூறின் வட்டார வழக்கினைக் கொடுந்தமிழ் என்றும் அது வழங்கப்படும்
இடத்தினைக் கொடுந்தமிழ் நாடென்றும் கொண்டனர்.
தமிழ் மொழி பேசப்பட்ட நிலத்தைச் செந்தமிழ் நிலம் என்றனர். இது தமிழில் உள்ள இயற்சொல் வழக்கில் இருந்த நிலப்பகுதி. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம் என்பது செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்திருந்த நிலப்பகுதி (நாடு). தொல்காப்பியர் காலத்தில் அவை பன்னிரண்டு நாடுகளாக விளங்கின. இந்த நாடுகளில் செந்தமிழ் எனப்படும் இயற்சொற்களோடு புதிதாகச் சேர்க்கப்பட்டோ, செந்தமிழ்ச் சொற்களுக்கு மாற்றுச் சொற்களாகவோ வழங்கப்பட்ட தமிழ்ச் சொற்களைத் திசைச்சொல் எனப் பாகுபடுத்தியுள்ளனர்.[1][2] என்ற எண்ணிக்கையில் சில நாடுகள் இருந்துள்ளது.[3]
சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, தொண்டை நாடு முதலான பாகுபாடுகள் ஆண்ட அரசர்களின் குடிப் பெயர்கள் கொண்டு அமைந்தவை.
திராவிட நாடு என்னும் பாகுபாட்டுக் குறியீடு கால்டுவெல் தமிழ்மொழிக் குடும்பத்துக்குத் திராவிட மொழிக் குடும்பம் எனப் பெயர் சூட்டிய பின்னர் உருவாக்கப்பட்ட குறியீடு.
கொடுந்தமிழ் என்பது வளைந்த தமிழ். இக்காலப் பேச்சு மொழியில் உள்ள வட்டார வழக்குகள் இலக்கிய மொழியிலிருந்து சிதைந்த (வளைந்த) கொடுந்தமிழ் நடையின.
தமிழ் மொழி பேசப்பட்ட நிலத்தைச் செந்தமிழ் நிலம் என்றனர். இது தமிழில் உள்ள இயற்சொல் வழக்கில் இருந்த நிலப்பகுதி. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம் என்பது செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்திருந்த நிலப்பகுதி (நாடு). தொல்காப்பியர் காலத்தில் அவை பன்னிரண்டு நாடுகளாக விளங்கின. இந்த நாடுகளில் செந்தமிழ் எனப்படும் இயற்சொற்களோடு புதிதாகச் சேர்க்கப்பட்டோ, செந்தமிழ்ச் சொற்களுக்கு மாற்றுச் சொற்களாகவோ வழங்கப்பட்ட தமிழ்ச் சொற்களைத் திசைச்சொல் எனப் பாகுபடுத்தியுள்ளனர்.[1][2] என்ற எண்ணிக்கையில் சில நாடுகள் இருந்துள்ளது.[3]
சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, தொண்டை நாடு முதலான பாகுபாடுகள் ஆண்ட அரசர்களின் குடிப் பெயர்கள் கொண்டு அமைந்தவை.
திராவிட நாடு என்னும் பாகுபாட்டுக் குறியீடு கால்டுவெல் தமிழ்மொழிக் குடும்பத்துக்குத் திராவிட மொழிக் குடும்பம் எனப் பெயர் சூட்டிய பின்னர் உருவாக்கப்பட்ட குறியீடு.
கொடுந்தமிழ் என்பது வளைந்த தமிழ். இக்காலப் பேச்சு மொழியில் உள்ள வட்டார வழக்குகள் இலக்கிய மொழியிலிருந்து சிதைந்த (வளைந்த) கொடுந்தமிழ் நடையின.
பொருளடக்கம்
கொடுந்தமிழ் என்னும் சொல்வழக்கு
திசைச்சொல்லுக்குத் தொல்காப்பியமும், [4] நன்னூலும் [5] இலக்கணம் கூறுகின்றன.இந்த இலக்கண நூல்கள் இரண்டுமே செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்திருக்கும் 12 நிலப்பகுதியில் பேசப்படும் மொழியைத் திசைச்சொல் என்றே குறிப்பிடுகின்றன. தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய ஆசிரியர் திசைச்சொல்லைத் திசைச்சொல் என்றே குறிப்பிடுகிறார்.
நன்னூலுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் திசைச்சொல்லைக் 'கொடுந்தமிழ்' என்னும் தொடரால் குறிப்பிடுகின்றனர்.[யார்?][யார்?] சொல் வட்டார வழக்குகளில் சிதைவு பெற்று வழங்கும் சொல் வளைந்த உருவில் பேசப்படுவதால் இதனை இக்கால மொழியியலாளர் கொடுந்தமிழ் எனக் குறிப்பிடுகின்றனர்.
இது கொடுந்தமிழ் என்னும் சொற்றொடர் பற்றிய வரலாறு.
கொடுந்தமிழ் நாடுகள்
தொல்காப்பியர் தம் பாடலில் கொடுந்தமிழ் நாடுகள் பன்னிரண்டு என்று கூறுகிறார். ஆனால் அவர் எவ்வெப்பகுதிகள் கொடுந்தமிழ் நாடென்று வழங்கப்படுமென்று கூறவில்லை.[6]“ | செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி. |
” |
ஆனால் இடைக்காலத்தில் தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் ஆகியோரும் நன்னூலுக்கு உரையெழுதிய மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர் போன்றோரும் அப்பன்னிரு நாடுகள் இவை என்று கூறுகின்றனர்.
“ | தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி பன்றிஅருவா அதன்வடக்கு — நன்றாய சீதமலநாடு புனல்நாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிரு நாட்டெண். |
” |
- தென்பாண்டி நாடு
- குட்ட நாடு
- குட நாடு
- கற்கா நாடு
- வேணாடு
- பூழி நாடு
- பன்றி நாடு
- அருவா நாடு
- அருவா வடதலை நாடு
- சீத நாடு
- மலையமான் நாடு
- புனல் நாடு
செந்தமிழ் சேர்ந்த பன்னிரண்டு நாடுகள்
இந்தப் பெயர்கள் நாட்டின் இருப்பிடம், நாட்டின் பாங்கு முதலானவற்றின் அடிப்படையில் அமைந்தவை. அவை [7]- பொங்கர் நாடு
- ஒளி நாடு
- தென்பாண்டிய நாடு
- குட்ட நாடு
- குடநாடு
- பன்றி நாடு
- கற்காநாடு
- சீதநாடு
- பூழிநாடு
- மலையாள நாடு
- அருவாநாடு
- அருவா வடதலைநாடு
கொடுந்தமிழ் நாட்டுப் பகுதிகளும் வழங்கப்பட்ட கிளைமொழிச் சொற்களும்
கொடுந்தமிழ் நாடு | தற்காலப் பெயர் | கிளைமொழி அல்லது கொடுந்தமிழ்ச் சொல் | பொதுமொழி அல்லது செந்தமிழ்ச்சொல் |
1.தென்பாண்டி நாடு | திருநெல்வேலிப் பகுதி | சொன்றி | சோறு |
2. குட்ட நாடு | கேரளத்திலுள்ள கோட்டயம், கொல்லம் மாவட்டங்கள் | தள்ளை | தாய் |
3. குட நாடு | வடமலபார் | அச்சன் | தந்தை |
4. கற்கா நாடு | கோயம்புத்தூர் சார்ந்த மலைப் பகுதிகள் | கையர் | வஞ்சர் |
5. வேணாடு | திருவாங்கூரின் தென்பகுதி(கன்னியாகுமரி மாவட்டம்) | கிழார் | தோட்டம் |
6. பூழி நாடு | கோழிக்கோடு | ஞமலி | நாய் |
7. பன்றி நாடு | பழனி மலை சூழ்ந்த பகுதி | செய் | வயல் |
8. அருவா நாடு | வட ஆற்காடு, தென் ஆற்காடு, செல்கல்பட்டு | கேணி | சிறுகுளம் |
9. அருவா வடதலை நாடு | சித்தூர், நெல்லூர் | எகின் | புளி |
10. சீத நாடு | நீலகிரி | எலுவன் | தோழன் |
11. மலையமான் நாடு | திருக்கோவலூர் சூழ்ந்த பகுதி | இகுளை | தோழி |
12. புனல் நாடு | சோழ நாடு | ஆய் | தாய் |